செய்திகள்
மறைமலைநகரில் கொள்ளையர்கள் 2 பேர் கைது
மறைமலைநகரில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மறைமலைநகர், காந்தி நகரை சேர்ந்த ரெங்கன், ஜெகதீசன் என்பதும் வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 2 பேருக்கும் வேறு பகுதியில் நடந்த கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.