செய்திகள்

தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு

Published On 2019-01-24 07:32 GMT   |   Update On 2019-01-24 07:32 GMT
பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கவர்னர் கிரண்பேடி அறிவித்துள்ளார். #KiranBedi
புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது வதந்தியாக இருக்கலாம்.



பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இனி நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.  #KiranBedi



Tags:    

Similar News