செய்திகள்

புயல் நிவாரணம் வழங்ககோரி அரசு அலுவலகம் முன்பு விவசாயிகள் பொங்கலிடும் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

Published On 2019-01-07 07:01 GMT   |   Update On 2019-01-07 07:01 GMT
புயல் நிவாரணம் வழங்ககோரி அரசு அலுவலகம் முன்பு விவசாயிகள் பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #Farmers

மன்னர்குடி:

திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்த ஆலாத்தூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 60 சதவீத மகசூல் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேச அரசு மறுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணைம் வழங்க வலியுறுத்தி பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் நீதி கேட்டு மன்னார்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் தினத்தன்று பொங்கலிடும் போராட்டம் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Farmers

Tags:    

Similar News