செய்திகள்
தமிழக காங்கிரஸ் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம்- திருநாவுக்கரசர்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் 10 நாள் தொடர் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.
அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.
அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
மத்திய-மாநில அரசுகளின் செயல்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார பொதுக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2-ந்தேதியில் இருந்து 12-ந் தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar