செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் முகேஷ் அம்பானி தரிசனம்
முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ராமேசுவரம் கோவில் சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். #MukeshAmbani
ராமேசுவரம் :
ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற அவர்கள் அதன்பின்னர் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமில் வந்திறங்கினர்.
ராமேசுவரம் கோவிலில் அவர்களை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, குருக்கள் ரவி பர்வே ஆகியோர் மாலை கொடுத்து வரவேற்றனர். பின்பு விநாயகர் சன்னதியில் 22 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி-அம்மன் சன்னதிகளில் விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அம்மன் சன்னதியில் திருக்கோவில் சார்பில் அவருக்கு ராமலிங்க பிரதிஷ்டை படம், ராமர் படம், பிரசாதம் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் புத்தகத்தில் முகேஷ் அம்பானி குறிப்பு எழுதினார்.
தனது குடும்பத்தினர் பெயர்களில் 5 உறைகளில் தலா ரூ.11,000 வீதம் வைத்து கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். மேலும் அவர் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று இணை ஆணையரிடம் கேட்டார். அதற்கு இணை ஆணையர், கோவிலின் 2-ம் பிரகாரத்தின் ஒரு பகுதி திருப்பணி நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அந்த பிரகாரத்தை கட்டித்தருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். #MukeshAmbani
ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற அவர்கள் அதன்பின்னர் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமில் வந்திறங்கினர்.
ராமேசுவரம் கோவிலில் அவர்களை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, குருக்கள் ரவி பர்வே ஆகியோர் மாலை கொடுத்து வரவேற்றனர். பின்பு விநாயகர் சன்னதியில் 22 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி-அம்மன் சன்னதிகளில் விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அம்மன் சன்னதியில் திருக்கோவில் சார்பில் அவருக்கு ராமலிங்க பிரதிஷ்டை படம், ராமர் படம், பிரசாதம் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் புத்தகத்தில் முகேஷ் அம்பானி குறிப்பு எழுதினார்.
தனது குடும்பத்தினர் பெயர்களில் 5 உறைகளில் தலா ரூ.11,000 வீதம் வைத்து கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். மேலும் அவர் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று இணை ஆணையரிடம் கேட்டார். அதற்கு இணை ஆணையர், கோவிலின் 2-ம் பிரகாரத்தின் ஒரு பகுதி திருப்பணி நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அந்த பிரகாரத்தை கட்டித்தருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். #MukeshAmbani