செய்திகள்

குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலுக்கு கணவன்-மனைவி பலி

Published On 2018-11-19 07:13 GMT   |   Update On 2018-11-19 07:13 GMT
குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட நகை தொழிலாளி அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். #Mysteryfever

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே உள்ள மூங்கபட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரி (வயது 33) நகை தொழிலாளி. இவரது மனைவி ரோஜா (எ) குமரி (27), மதியழகன் (6), கோபியா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.

அரி, ரோஜா இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கபட்டனர். அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று மாலை 2 பேர் உடல் நிலையும் மோசமானது. இதனையடுத்து வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டனர். அங்கு சேர்க்கபட்ட சிறிது நேரத்தில் அரி பரிதாபமாக இறந்தார். ரோஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

மூங்கப்பட்டு கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். வட்டார மருத்துவ அலுவலர் விமல் தலைமையில் அங்கு மருத்துவ முகாம், சுகாதார பணிகள் நடந்தது.

அரி, ரோஜா தம்பதி இறந்ததால் அவர்கள் குழந்தைகள் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.  #Mysteryfever

Tags:    

Similar News