செய்திகள்

காரைக்காலில் புயலால் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார்

Published On 2018-11-16 10:14 GMT   |   Update On 2018-11-16 10:14 GMT
காரைக்காலில் புயலால் பாதித்த பகுதிகளை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #narayanasamy #gajacyclone #rain

காரைக்கால்:

கஜா புயல் நாகை மாவட்டத்தில் கரையை கடந்தது. அப்போது கஜா புயலின் கோர தாண்டவத்தில் காரைக்கால் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதைத்தொடர்ந்து இன்று மதியம் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் காரைக்கால் சென்றனர். அங்கு அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #narayanasamy #gajacyclone #rain

Tags:    

Similar News