செய்திகள்

அரவக்குறிச்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி- எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2018-11-14 15:05 GMT   |   Update On 2018-11-14 15:05 GMT
அரவக்குறிச்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எங்கள் நிர்வாகிகள் முழுமூச்சாக வேலை செய்கிறார்கள் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #admk
கரூர்:

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் யார்? என்று எனக்கு தெரியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளதாக சொல்கிறீர்கள். இந்த மாதிரி சப்ஜெக்ட்களுக்கு முதல்வர், துணை முதல்வர் பதில் அளிப்பார்கள். 

அரவக்குறிச்சி தேர்தல் பணிகள் சூடு பிடிச்சுருக்கு. எங்கள் நிர்வாகிகள் முழுமூச்சாக வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. யார்? வேட்பாளர் என்பதை முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் நீங்கள்(அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்) அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட தயாரா? என வி. செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளாரே என கேட்டதற்கு, ஆகிறதை பேச சொல்லுங்கள். அவர் அமைச்சராக இருந்தபோது ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்தாரா? தேர்தலில் யார் டெபாசிட் வாங்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். 

இவ்வாறு அவர் கூறினார்.  #ministermrvijayabaskar #admk 
Tags:    

Similar News