செய்திகள்

ராமேசுவரத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு - போலீசார் விசாரணை

Published On 2018-11-07 08:36 GMT   |   Update On 2018-11-07 08:36 GMT
ராமேசுவரத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரணை நடத்தி வருகிறார். #Acid #AcidAttack
ராமநாதபுரம்:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெண் மீதும் ஆசிட் வீசப்பட்டது.

ராமேசுவரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் வெண்மணி. இவர் நேற்று இரவு தனது சகோதரர் மெய்யரசு என்பவருடன் அதே பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டி.ஏ.எம்.எஸ். நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து வைத்தனர்.

ஆனால் ஆத்தரம் அடங்காத அந்த கும்பல் சிறிது நேரத்தில் வெண்மணி வீட்டுக்கு வந்து அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியது.

மேலும் அந்த கும்பல் வெண்மணியின் மனைவி கவுசல்யா (வயது 20) மீது ஆசிட் வீசியது. இதனால் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.



இந்த தாக்குதலில் வெண்மணியின் தந்தை வரதராஜன், மெய்யரசு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராமேசுவரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரணை நடத்தி வருகிறார். #Acid #AcidAttack



Tags:    

Similar News