செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ் ஆஜர்

Published On 2018-10-24 11:02 GMT   |   Update On 2018-10-24 11:02 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகராவ் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
சென்னை:

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், அரசு செயலாளர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி உள்ளனர்.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் 3 முறை ஆஜராகி இருந்தார்.

இப்போது அவரிடம் மேலும் சில விவரங்களை கேட்பதற்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் ராமமோகனராவ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
Tags:    

Similar News