செய்திகள்

ஆரணியில் அம்மன் கோவிலுக்குள் 5 கால்கள் உடைய மாடு புகுந்ததால் பரபரப்பு

Published On 2018-09-27 09:04 GMT   |   Update On 2018-09-27 09:04 GMT
பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் 5 கால்கள் உடைய மாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாட்டிற்கு பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் புதுவாயல் - பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் வளாகத்தில் திடீரென 5 கால்கள் உடைய பசு மாடு ஒன்று புகுந்து சுற்றி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பசுமாடு யாருடையது என்று தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் நின்ற 5 கால் உடைய பசு மாட்டை பார்த்து சென்றனர்.

அந்த மாட்டுக்கு புன்னாக்கு, தவிடு, தண்ணீர் ஆகியவற்றை கொடுத்தனர். மேலும் பெண்கள் மாடுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூஜை செய்து வணங்கினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5 கால்கள் உடைய பசுமாடு எப்படி ஊருக்குள் வந்தது. அதன் உரிமையாளர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News