செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வெற்றி பெறும்- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

Published On 2018-09-17 12:40 GMT   |   Update On 2018-09-17 12:40 GMT
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எக்கு கோட்டை எனவே அங்கு அதிமுக தான் வெற்றி பெரும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். #pollachijayaraman

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாயநலகூடத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமைதாங்கி குத்துவிளக்கேற்றி சமுதாய வளைகாப்பை தொடங்கி வைத்து 120 பெண்களுக்கு சேலை,பூ,மஞ்சள் கயி,பழம் வளையல், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களைவழங்கினார்.

கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டி மடைசண்முகம் ,திட்ட அலுவலர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி வரவேற்று பேசினார். பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது :-

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி கொள்வது அவர்களின் கடமை.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத எக்கு கோட்டை எனவே அங்கு அ.தி.மு.க வேட்பாளர் யார் போட்டியிட்டாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அந்த வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்பிப்போம். தி.மு.க ஆட்சியில் என்னென்ன குறைபாடுகள் , குற்றச்சாட்டுகள் இருந்ததோ அதை எல்லாம் இன்றைக்கு எங்கள் மீது சுமத்த பார்க்கிறார்கள்.

தி.மு.க.வினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரம் கிடையாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு எங்கள் மீது ஒவ்வொரு அம்பாக எய்து பார்க்கிறார்.அம்புகள் எதுவும் எங்களைதாக்க முடியாது. அது மீண்டும் தி.மு.க . வினரையே தாக்கும் .

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியினபோது கிணத்துக் கடவு பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் மூர்த்தி, மாவட்டமகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள தேவராஜ் , தாமரை ஈஸ்வரன், சண்முகம் , பிரபு, தங்கராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர். #pollachijayaraman

Tags:    

Similar News