செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் துவக்கம் - 7 பேர் விடுதலை குறித்த முடிவு என்ன?

Published On 2018-09-09 10:41 GMT   |   Update On 2018-09-09 13:11 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தற்போது துவங்கியது. #TNSecretariat #TNCM #Palaniswami
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் முடிவு தொடர்பாக தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த அமைச்சரவை கூட்டம் துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மிகுந்த எதிர்ப்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளுக்கு மத்தியில் துவங்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்த 7 பேரின் விடுதலை குறித்து எடுக்கப்படும் முடிவை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். #TNSecretariat #TNCM #Palaniswami
Tags:    

Similar News