செய்திகள்

சோளிங்கர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் கொலை: ஏரியில் பிணம் வீச்சு

Published On 2018-06-10 14:25 GMT   |   Update On 2018-06-10 14:25 GMT
சோளிங்கர் அருகே 10-ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்று ஏரியில் பிணத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சோளிங்கர்:

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சந்தை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி லதா. இவர்களது மகன் கார்த்தி (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கார்த்தி நேற்று காலை டியூசன் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் மாணவன் கிடைக்க வில்லை.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மாணவன் கார்த்திக்கை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சோளிங்கர் ஏரியில் மாணவன் கார்த்தி இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பார்வையிட்டனர். மாணவன் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன.

மாணவனை யாரோ அடித்துக் கொன்று ஏரியில் உடலை வீசியது தெரிய வந்தது. இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News