செய்திகள்

ஆத்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2018-06-05 04:31 GMT   |   Update On 2018-06-05 04:31 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன் (வயது 22). இவர் பேஸ்புக் மூலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஒரு பெண்ணிடம் பழகினார். பின்னர் பேஸ்புக் மேசஞ்சர் மூலம் அவரிடம் இருந்து நைசாக செல்போன் எண்ணை வாங்கினார்.

இதையடுத்து ராஜேஸ் கண்ணன் செல்போன் எண்ணை தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்- அப் மூலம் தொடர்பு கொண்டு பேசி நட்பை ஏற்படுத்தினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்து வந்தனர்.

அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை ராஜேஸ் கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஸ் கண்ணனிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர், திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து கதறினார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

தன்னை காதலித்து ஏமாற்றிய ராஜேஸ்கண்ணன் மீது அவர் மல்லியக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News