செய்திகள்

வேலூர் கலெக்டர் ஆபீசில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற இந்து அமைப்பினர் 4 பேர் கைது

Published On 2018-05-15 08:18 GMT   |   Update On 2018-05-15 08:18 GMT
வேலூர் கலெக்டர் ஆபீசில் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்ற இந்து அமைப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தின் நீட்சியாக நேற்று வேலூருக்கு வந்திருந்தார். பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வலியுறுத்தி மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவரை, சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் என்ற இந்து அமைப்பினர் தாக்க முயன்றனர்.

சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியில் மதமாற்றம் செய்ய தாக்குதல் நடத்துபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது தான், அய்யாக்கண்ணுவை ஒருமையில் பேசி தாக்க முற்பட்டனர். மேலும் கோ‌ஷம் எழுப்பினர்.

கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் கோ‌ஷம் எழுப்பிய புகாரில் சத்துவாச்சாரி போலீசார், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ராஜகோபால் (வயது 48) உள்பட 4 நிர்வாகிகளை கைது செய்தனர்.

ஆனால் அய்யாக்கண்ணுவை தாக்க முயன்றது தொடர்பாக, சக்தி சேனா அமைப்பினர் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  #Tamilnews
Tags:    

Similar News