செய்திகள்

நாகை அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

Published On 2017-11-15 10:31 IST   |   Update On 2017-11-15 10:31:00 IST
நாகை அருகே புத்தூர் கோட்டை வாசல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
திருமருகல்:

நாகை அருகே புத்தூர் கோட்டை வாசல் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள், 2 வாலிபர்கள் உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 2 வாலிபர்களும் 20 வயதுடையவர்களாக இருந்தனர்.

உடனே இதுபற்றி நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயிலில் அடிபட்டு பலியான 2 வாலிபர்கள் யார்? என தெரியவில்லை. 2 பேரும் ஜீன்ஸ் பேண்டும், நீல கலர் சட்டையும் அணிந்திருந்தனர்.

அவர்கள் 2 பேரும், ரெயிலில் அடிபட்டி இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்யும் முடிவோடு ரெயில் முன் பாய்ந்தார்களா? என்று ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News