செய்திகள்

காரைக்குடியில் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2017-10-13 06:08 GMT   |   Update On 2017-10-13 06:08 GMT
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கிய தனியார் ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காரைக்குடி:

தமிழகம் முழுமுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜி.டி. நக ரில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் இன்று நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ரத்த பரிசோதனை நிலையத்தில் தேக்கி வைத்திருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் வடிவேலுவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்த மேல் நடவடிக்கைக்காக சப்-கலெக் டர் ஆஷா அஜித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரத்த பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News