செய்திகள்

காரைக்குடி-மதுரையில் அங்கன்வாடி ஊழியர்-சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலி

Published On 2017-10-13 10:27 IST   |   Update On 2017-10-13 10:27:00 IST
காரைக்குடி-மதுரையில் அங்கன்வாடி ஊழியர்-சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த சங்கராபுரம் அருகே உள்ள ஓ.ஏ. காலனியைச் சேர்ந்தவர் அமராவதி (வயது 60). அந்தப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமராவதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாக வில்லை.

ரத்த பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதியானது. எனவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவக்குழுவினர் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகாமல் அமராவதி பரிதாபமாக இறந்தார்.

மதுரை அண்ணாநகர், யாகப்பா நகரைச் சேர்ந்த வர் விஜய். வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாரதிவேல் (3). தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

காய்ச்சலால் அவதிப்பட்ட பாரதி வேலை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாரதிவேல் பரிதாபமாக இறந்தான்.

Similar News