செய்திகள்
செம்மர கட்டைகளுடன் கைதான 8 பேரை படத்தில் காணலாம்

ஆந்திராவில் செம்மரம் வெட்டிய 8 பேர் கைது

Published On 2017-10-11 05:56 GMT   |   Update On 2017-10-11 05:56 GMT
ஆந்திராவில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் வெட்டிக் கடத்தியதாக திருப்பத்தூரை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்:

ஆந்திர மாநிலம் கடப்பா மற்றும் சேஷாசல வன பகுதியில் செம்மரங்கள் கடத்தலை தடுக்க ஆந்திர தனிப்படையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடப்பா மாவட்டம் வீரயபல்லி மண்டலம் சின்னமாண்டம் வன பகுதியில் உதவி போலீஸ் சூப்பிரெண்டு கிருஷ்ணாராவ் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை கும்பல் ஒன்று வெட்டி அடுக்கி கொண்டிருந்தனர்.

போலீசாரை கண்டதும் கும்பல் தப்பி ஓடினர். அவர்களில் 8 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் வெட்டிய 14 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சமாகும் பிடிப்பட்ட 8 பேரும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் குறித்து முழு விவரங்களை ஆந்திர போலீசார் வெளியிடவில்லை.

அவர்களுடன் எத்தனை பேர் செம்மரம் வெட்ட வந்தனர். அழைத்து வந்த ஏஜெண்டுகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News