செய்திகள்

சீர்காழி அருகே 3 மாத கர்ப்பிணி கொலை: கணவர் கைது

Published On 2017-03-30 16:16 IST   |   Update On 2017-03-30 16:16:00 IST
சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்புங்கூரை சேர்ந்தவர் பரம்மநாதன். இவரது மகள் தேவி (28).

இவருக்கும் சிதம்பரம் எல்லாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி சரவணன் (32) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. தேவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

அவர் தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தேவியின் தந்தை பரம்மநாதன் வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மர்மசாவு என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தேவியின் கணவர் சரவணனை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் மனைவியை கொன்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், கடந்த 28-ந் தேதி நள்ளிரவு தேவியை பார்க்க வீட்டின் பின் பக்கமாக வந்ததாகவும், தேவியுடன் பேசிக் கொண்டு இருந்த போது குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

நான் தேவியை கீழே தள்ளி விட்டேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். அதன் பின்னர் தான் அவர் இறந்தது தெரியவந்தது என்று கூறி உள்ளார்.

Similar News