செய்திகள்

சிறுமி நந்தினி கொலை தேசத்தின் அவமானம்: சீமான்

Published On 2017-02-11 09:57 IST   |   Update On 2017-02-11 09:56:00 IST
அரியலூரில் சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தின் அவமானமாக கருத வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (வயது 17) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நந்தினி குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நந்தினியைப் போன்று பல பெண்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். இன்றைக்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்ற நிலையை அரசு உருவாக்கி விட்டது.

நந்தினி கொல்லப்பட்ட சம்பவம் ஜாதி, மதத்தை தாண்டி சமூக அவல நிலையைக் காட்டுவதாக உள்ளது. இச்சம்பவத்தை தேசத்தின் அவமானமாக கருத வேண்டும். மேலும் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசியல் நிலை குறித்து சீமான் கூறியபோது,

தனக்கு முழு ஆதரவு உண்டு என்று கூறும் அ.தி.மு.க. பொறுப்பு பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை சொகுசு பஸ்களில் வைத்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இது தான் ஜனநாயகமா? இந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News