செய்திகள்
என்ஜின் பழுதானதால் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ்
என்ஜின் பழுதானதால் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சிதம்பரம்:
நாகூரில் இருந்து சிதம்பரம் வழியாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணி அளவில் சிதம்பரம் வந்தது.
திடீரென அந்த ரெயிலின் என்ஜின் பழுதானது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியவில்லை. பழுதான ரெயில் என்ஜினை சரி செய்ய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களது முயற்சிக்கு பலனில்லை.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை, புதுசத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது.
அந்த என்ஜினை ரெயில்வே ஊழியர்கள் கம்பன் எக்ஸ்பிரசில் இணைத்தனர். அதன் பின்னர் கம்பன் எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதமாக அதிகாலை 2 மணி அளவில் சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் கம்பன் எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் பழுதாகி நின்றதால் அந்த பாதையில் வரும் மண்ணை எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.
நாகூரில் இருந்து சிதம்பரம் வழியாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணி அளவில் சிதம்பரம் வந்தது.
திடீரென அந்த ரெயிலின் என்ஜின் பழுதானது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியவில்லை. பழுதான ரெயில் என்ஜினை சரி செய்ய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களது முயற்சிக்கு பலனில்லை.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை, புதுசத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது.
அந்த என்ஜினை ரெயில்வே ஊழியர்கள் கம்பன் எக்ஸ்பிரசில் இணைத்தனர். அதன் பின்னர் கம்பன் எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதமாக அதிகாலை 2 மணி அளவில் சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் கம்பன் எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் பழுதாகி நின்றதால் அந்த பாதையில் வரும் மண்ணை எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.