சமையல்

பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published On 2026-02-12 10:45 IST   |   Update On 2026-02-12 10:45:00 IST
  • பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும்.
  • காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.

* வேகவைத்த கேரட் அல்லது பரங்கிக்காய், பாதி வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் ருசி அபாரமாக இருக்கும்.

* பழைய சாதத்தை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ரவை, மைதா கலந்து கடுகு, மிளகாய், வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புது மாதிரியாக இருக்கும்.

* கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுந்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெய்யும் குடிக்காது.

* கத்தரிக்காய். வெண்டைக்காய், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் என எந்த பொரியலுக்கும் சிறிது சீரகப்பொடியை பச்சையாக தூவி இறக்கி விடுங்கள். பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும். தேங்காய் சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

* இஞ்சியை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றை கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கிவிடவும். ஊறுகாய் போல ருசியாக இருப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

* சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன்பு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப்போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, சுவையாகவும் இருக்கும்.

*வடித்த சுடு கஞ்சியில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு விட்டால் வாழைப்பூவில் உள்ள பால் கஞ்சியில் கலந்து விடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளலாம்.

* காய்கறிகள் லேசாக வாடிப்போய் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்திடுங்கள். அதில் காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.

* வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கடுகை இடித்து சேர்த்து புளிக்காத தயிரும் கலந்து சாலட்டாக மாற்றி சுவைக்கலாம்.

* 50 கிராம் புதினாவை காய வைத்து இடித்து தூளாக்கி அதனை 10 கிலோ அரிசியில் தூவி வையுங்கள். வண்டு விழாது. சோற்றுக்கும் நல்ல சுவை கிடைக்கும்.

* தேங்காய் பால் பிழிந்தெடுத்த பின்பு அந்த துருவலை வைத்து துவையல் அரைக்கலாம். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுந்தம் பருப்பு போன்றவைகளை வறுத்து புளியும் சேர்த்து அரைக்க வேண்டும். உப்பும், கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* புட்டு வேக வைத்த பின்பு, குழாயில் இருந்து அதை எளிதாக எடுக்க வேண்டுமானால் முதலிலே குழாயின் உள்ளே சிறிதளவு நெய்யை சேர்த்து விடுங்கள். புட்டு அதிக ருசியாகவும் இருக்கும்.

* சூடான பானங்களை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரின் அடியில் ஒரு துணியை போடுங்கள். எவ்வளவு சூடான திரவத்தை ஊற்றினாலும் கண்ணாடி டம்ளர் உடையாது.

Tags:    

Similar News