சமையல்

இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published On 2026-02-01 15:04 IST   |   Update On 2026-02-01 15:04:00 IST
  • வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
  • காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.

* வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

* சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும்.

* புதினா சட்னி செய்யும் பொழுது சிறிது வேர்க்கடலை வறுத்து போட்டு செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.

* கசகசா, முந்திரி சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து குருமாவில் சேர்த்தால் எந்த குருமாவாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.

* புளி சாதம், எலுமிச்சை சாதம் முதலியவை செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் வாசனை தூக்கும்.

* வெறும் வாணலியில் அவலை வறுத்து அரைத்து, அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

* மோருடன் சிறிது இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.

* ஆப்பம் சுடும் பொழுது அந்த மாவில் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொண்டால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.

* பிரியாணிக்கு சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.

* வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.

* காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.

* கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கெட்டி தயிரை கலந்தால் கத்திரிக்காய் கறுப்பாகாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.

* பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது கடைசியில் பொட்டு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.

* உளுந்து வடைக்கு மிக்சியில் அரைக்கும் பொழுது மிக்சி ஜாரில் சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு அரைத்தால் மிக்சியை எளிதில் கழுவி விடலாம்.

* பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் அதன் காரம் குறையும்.

* முறுக்கு, தட்டை, சீடை போன்ற பலகாரங்கள் செய்யும் பொழுது அரிசி மாவை முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்பு பலகாரம் செய்தால் மொறுமொறுப்பு கூடுவதுடன் ருசியும் அபாரமாக கிடைக்கும்.

* இட்லி பொடி செய்யும்போது கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு அதனுடன் கொள்ளு பருப்பையும் சிறிது சேர்த்தால் பொடி சுவையாக இருப்பதுடன் கெட்ட கொழுப்பும் குறையும்.

* பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை லேசாக வறுத்து விட்டு பின்பு பாயசம் செய்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

Tags:    

Similar News