செய்திகள்

திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்

Published On 2017-02-05 18:45 IST   |   Update On 2017-02-05 18:45:00 IST
சேத்தியாத்தோப்பு அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்ணை உறவினர்களும், பொதுமக்களும் வாழ்த்தினர்.

சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தேவன்குடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 22). பி.எஸ்சி. பட்டதாரி. இவரும், வாக்கூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீ யரான சந்திரமோகன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. காதலுக்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டினர். மேலும் ரஞ்சிதாவுக்கும், சந்திரமோகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் சந்திரமோகன் திடீரென ரஞ்சிதாவை திருமணம் செய்ய முடியாது என மறுத்தார். அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து ரஞ்சிதா, சந்திரமோகன் ஆகியோரையும், அவருடைய பெற்றோரையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது சந்திரமோகன், ரஞ்சிதாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சந்திர மோகனுக்கும், ரஞ்சிதாவுக்கும் அந்த பகுதியில் உள்ள தீப்பாய்ந்தநாச்சியார் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகளும், உறவினர்களும், பொதுமக்களும் மணமக்களை வாழ்த்தினர்.

Similar News