டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ரூப்லெவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2025-04-15 16:42 IST   |   Update On 2025-04-15 16:42:00 IST
  • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
  • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

மாட்ரிட்:

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங் உடன் மோதினார்.

இதில் ரூப்லெவ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News