டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

Published On 2025-05-04 00:08 IST   |   Update On 2025-05-04 00:08:00 IST
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
  • பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News