டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினர் சபலென்கா, சக்காரி

Published On 2025-04-25 23:57 IST   |   Update On 2025-04-25 23:57:00 IST
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
  • கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, போலந்து வீராங்கனை மேக்டா லின்னெட் உடன் மோதினார்.

இதில் மரியா சக்காரி 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News