விளையாட்டு
null

உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு பாராட்டு விழா நடத்தும் தமிழ்நாடு அரசு

Published On 2024-12-16 11:20 IST   |   Update On 2024-12-16 11:31:00 IST
  • சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதிலும் இருந்து குகேஷூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து குகேஷூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

 


இதையடுத்து, சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் குகேஷூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

Tags:    

Similar News