விளையாட்டு

புரோ கபடி லீக்: அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ்-புனே அணிகள் இன்று மோதல்

Published On 2022-12-15 05:22 GMT   |   Update On 2022-12-15 05:22 GMT
  • இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

மும்பை:

9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.

உ.பி.யோத்தாசுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி அரைஇறுதியிலும் கலக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் சந்தித்த இரு ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News