ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வங்காளதேச அணியின் 2வது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் சாய்த்தார். 5.4 ஓவரில் 21/2
வங்காளதேச அணியின் முதல் விக்கெட்டை சாய் கிஷோர் சாய்த்தார்.
வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை 6-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சிங்கப்பூரின் என்ஜி ஜூ ஜி/ஜோஹான் பிரஜோகோவை 21-7, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.
இதையடுத்து, நாளை நடைபெறும் அரையிறுதியில் மலேசியாவின் ஆரோன் சியா/சூ வூய் யிக்கை, சாத்விக்- சிராக் ஜோடி எதிர்கொள்கிறது.
கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில், இந்தியா- மலேசியா அணிகள் மோதின. இதில், மலேசிய வீரர்களை வீழ்த்தி இந்திய வீரர்கள் கார்த்திக் தீபிகா பலிக்கல், சந்து ஹரிந்தர் பால் சிங் ஆகியோர் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார். இதன்மூலம், சவுரவ் கோசல் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்கள் மல்யுத்தம் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கால் மற்றும் மங்கோலியா வீராங்கனை பாட் ஆச்சிர் போலோர்டுயா ஆகியோர் மோதினர். இதில், 3-1 கணக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
கிரேக்க-ரோமன் மல்யுத்தம், வெண்கலப் பதக்கப் போட்டியில் 130 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொரியாவின் கிம் மின்சோக் ஐந்து புள்ளிகளை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.