ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
நான்காவது காலிறுதி போட்டியில் மலேசியா வெற்றி பெற 117 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம்.
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றியது.
4-வது காலிறுதியில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
வில்வித்தை கலப்பு ரிகர்வ் பிரிவில் இந்திய அணி, இந்தோனேசியாவிடம் ஷூட் அவுட் முறையில் தோல்வி அடைந்தது.
குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, சீனா தைபே வீராங்கனையிடம் தோற்று வெண்கலம் வென்றார்.
இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசியா அணியிடம் தோற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் கொரியா அணி, இந்திய அணியை 21-15, 18-21, 21-13 என்ற செட்களில் தோற்கடித்தது. இதில் தோற்ற இந்தியா காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியா, இந்தியாவை 21-18, 21-18 என்ற நேர் செட்களில் தோற்கடித்தது. இதில் தோல்வி அடைந்த இந்தியா காலிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி 2-1 என ஹாங்காங் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
3-வது காலிறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்.