விளையாட்டு
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி
- முதல் செட்டை இந்திய வீரர் லக்சயா சென் கைப்பற்றினார்.
- அடுத்த 2 செட்களையும் தாய்லாந்து வீரர் வென்றார்.
பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்து வீரருடன் மோதினார்.
இதில் இந்திய வீரர் லக்சயா சென் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட தாய்லாந்து வீரர் அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என்ற கணக்கில் வென்றார்.
இந்த தோல்வியின் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் இருந்து இந்திய வீரர் லக்சயா சென் வெளியேறினார்.