விளையாட்டு
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - இந்தியாவின் பிவி சிந்து, லக்சயா சென் காலிறுதியில் தோல்வி
- இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க் வீரருடனான போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
- இந்தியாவின் பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தொற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகின் 4ம் நிலை வீரரான சௌ தியென் சென்-னை லக்சயா சென் எதிர்கொண்டார். இந்த போட்டியில் லக்சயா சென் 16-21, 21- 12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் ஆகியோர் மோதினர். இதில் பி.வி.சிந்து 12- 21, 10-21 என்ற நேற் செட்களில் தோல்வி அடைந்தார்.