கிரிக்கெட் (Cricket)
இங்கிலாந்து- இந்தியா தொடருக்கான IMPACT PLAYER விருதை வென்ற வாஷிங்டன் சுந்தர்
- இங்கிலாந்து இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
- சுந்தர் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து- இந்தியா ஆகிய அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடர் அனைவராலும் கவரப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 'IMPACT PLAYER' விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் விளாசிய 53 ரன்கள் மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.