கம்பேக் கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட்: துலீப் கோப்பையில் சதமடித்து அசத்தல்
- டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
- அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, மேற்கு மண்டல அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் ஒரு சிக்சர், 25 பவுண்டரி உள்பட 184 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.