கிரிக்கெட் (Cricket)
null

ஒரே வார்த்தை.. தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரோகித்.. அவரே சொன்ன தகவல்!

Published On 2025-06-06 13:30 IST   |   Update On 2025-06-06 13:44:00 IST
  • நான் சிவப்பு பந்துடன் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார்.
  • நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

இந்த முடிவுக்கு சமீபத்திய ஆட்டங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2024-25 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பேட்டிங் (5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள், சராசரி 6.20) மற்றும் கேப்டன்ஷிப்பில் ஏமாற்றமளித்ததாக இருக்கலாம்.

இந்நிலையில் தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சிவப்பு பந்தில் நான் விளையாடிய போட்டிகளை என் தந்தை அதிகளவில் பார்த்திருக்கிறார். அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிகம் பாராட்டுவார். அந்த வகையில், நான் ஓய்வு அறிவித்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், அவரிடம் அதே அளவுக்கு மகிழ்ச்சியும் இருந்தது. அது தான் என் தந்தை.

நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை என ரோகித் கூறினார்.

Tags:    

Similar News