கிரிக்கெட் (Cricket)
ரஞ்சி டிராபி: காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
- காலிறுதி போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.
- அரையிறுதி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிந்தன.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்:
ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா
பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்
சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்
டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்
முதல் காலிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்டும், 2வது காலிறுதியில் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்கால், ஆந்திராவும், 4வது காலிறுதியில் மும்பை, கர்நாடகாவும் மோதுகின்றன.
காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி பிப்ரவரி 15ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதியும் நடைபெறுகின்றன.