கிரிக்கெட் (Cricket)

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் துருப்புச் சீட்டு இவர்தான்..! நாசர் ஹுசைன்

Published On 2025-07-08 19:48 IST   |   Update On 2025-07-08 19:48:00 IST
  • எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இல்லாமல் இந்தியா அபார வெற்றி பெற்றது.
  • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா இடம் பெற உள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் போட்டிக்கும் 2ஆவது போட்டிக்கும் இடையில் 7 நாட்கள் இடைவெளி இருந்தபோதிலும், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட்டது.

பும்ரா இல்லாமல் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் எப்படி வீழ்த்த முடியும் என இந்திய அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் பும்ராவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி 10 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

நாளைமறுநாள் தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார். இந்த போட்டியில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக அவர் இருப்பார். பாரம்பரிய பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News