கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பையை வென்ற சக இந்திய அணி வீராங்கனைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஜெமிமா

Published On 2025-11-03 07:33 IST   |   Update On 2025-11-03 07:33:00 IST
  • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
  • சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதனையடுத்து கோப்பையுடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது இந்திய அணி வீராங்கனைகளுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் செல்பி எடுத்துக்கொண்டார். இப்புகைடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸின் (127 ரன், 14 பவுண்டரி) அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்த வெற்றியால் தான் இந்திய அணியின் உலக கோப்பை கனவு நனவாகியுள்ளது. இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணையத்தில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News