null
ஐபிஎல் மெகா ஏலம் யுக்தி சரியாக அமையவில்லை: ஸ்டீபன் பிளமிங்
- மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம்.
- ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை.
ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 154 ரன்களில் ஆல்அவுட்டாகி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெகா ஏலம் யுக்தி சரியாக அமையவில்லை. இதனால் தோல்வியை சந்தித்து வருவதாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
"மற்ற அணிகள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. இதுதான் ஏலத்தின் நோக்கம். ஆனால் எங்களால் ஏலத்தில் சரியான வீரர்களை பெற முடியவில்லை. இதனால் மேலிருந்து கீழ் வரை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். வீரர்களிடம் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.