ஐ.பி.எல்.(IPL)
null

இன்றிரவு ஒரு குழந்தையைப் போல தூங்குவேன்.. ஐ.பி.எல் வெற்றி பற்றி விராட் கோலி கண்ணீர்

Published On 2025-06-04 00:08 IST   |   Update On 2025-06-04 01:26:00 IST
  • என் இதயம், என் ஆன்மா பெங்களூருவுடன் உள்ளது.
  • ஏலத்தில், பலர் எங்கள் முடிவுகளை கேள்வி எழுப்பினர்.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து அவ்வணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியதாவது, "இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் சமர்ப்பணம். இந்த அணிக்கு எனது இளமை முழுவதையும் நான் அளித்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் வெற்றி பெற முயற்சித்தேன், என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன்.

இந்த நாள் வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நாங்கள் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டேன். நான் இந்த அணிக்கு விசுவாசமாக இருந்தேன். என் இதயம், என் ஆன்மா பெங்களூருவுடன் உள்ளது. இன்றிரவு, நான் ஒரு குழந்தையைப் போல தூங்குவேன்.

ABD அணிக்காகச் செய்தது மகத்தானது. நான்கு ஆண்டுகளாக ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் அணியில் பல முறை POTM ஆக இருந்து வருகிறார். அவர் மேடையில் இருக்கவும், கோப்பையை உயர்த்தவும் தகுதியானவர்.

ஏலத்தில், பலர் எங்கள் முடிவுகளை கேள்வி எழுப்பினர். ஆனால், எங்களிடம் இருந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மேலும் இந்த அணியின் வலிமையில் எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அணியில் உள்ள ஒவ்வொருவரும் இல்லாமல் இது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.

ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆர்சிபியின் 18 வருட நிறைவேறா கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News