கிரிக்கெட் (Cricket)

போட்டி நடத்திய நாடு, 3 முறை உலகக் கோப்பை வென்று சாதனை படைத்த இந்தியா

Published On 2026-03-09 00:12 IST   |   Update On 2026-03-09 00:12:00 IST
  • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 255 ரன்கள் குவித்தது.
  • அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் அரை சதமடித்தனர்.

அகமதாபாத்:

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் அதிரடி அரை சதங்களால் 255 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்றுது.

இந்நிலையில், போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது இந்தியா.

இதேபோல், 3 முறை டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

Tags:    

Similar News