கிரிக்கெட் (Cricket)

ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருது: சுப்மன் கில்- ஜோ ரூட் இடையே கடும் போட்டி

Published On 2025-10-22 13:28 IST   |   Update On 2025-10-22 13:28:00 IST
  • ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, சுப்மன் கில்- ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
  • இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் ஐசிசி ஆஸ்கார்கள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. மிக முக்கியமான விருதுகளான இந்த விழா இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்ற சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் டிராஃபி (Sir Garfield Sobers Trophy) என்ற ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, இந்தியாவின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் பேட்டர் ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இந்த விருது, ஒரு ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர். அதில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி (இருமுறை), பும்ரா ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர். சுப்மன் கில் வென்றால், 6-வது இந்திய வீரராவார்.

இந்திய அணியின் தலைவராக, 2025-ல் அனைத்து வடிவங்களிலும் அசாதாரணமான பேட்டிங் செயல்திறனை காட்டியுள்ளார். குறிப்பாக ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் அடித்து, அணியை வழிநடத்தியது அவரது பலம். அவர் இந்த விருதுக்கு இந்தியர்களில் முதல் தேர்வாக உள்ளார்.

இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேனாக ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் (குறிப்பாக ஆஷஸ் தொடர்) சதங்களைத் தொடர்ந்து அடித்து, அணியின் முதுகெலும்பாக இருந்தார். அவரது நிலையான செயல்திறன் அவரை இரண்டாவது முன்னிலை வீரராக்குகிறது. ஆஷஸ் தொடரில் மேலும் ரன்கள் சேர்த்தால், அவரது வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தற்போதைய நிலவரப்படி, சுப்மன் கில் இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவரது அணி தலைமைப் பொறுப்பும், பல்வேறு வடிவங்களில் சமநிலை காட்டியதும் காரணம். ஜோ ரூட், டெஸ்ட் அளவில் சிறப்பாக இருந்தாலும், ஒருநாள், டி20-யில் குறைந்த பங்களிப்பு அவருக்கு சவாலாக இருக்கும்.

விருது வழங்கல் விழா, 2025 டிசம்பர் அல்லது 2026 ஜனவரியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News