null
மைதானத்திற்குள் நுழைந்து பாண்ட்யாவுடன் செல்பி எடுத்த ரசிகர்- வைரலாகும் வீடியோ
- சையத் முஷ்டாக் அலி தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
- இதில் பரோடா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி தொடர் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் பரோடா அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது களத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ஹர்திக் பாண்ட்யாவுடன் செல்பி எடுத்தக் கொண்டார். இதனையடுத்து அந்த ரசிகரை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். செல்பி எடுத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் துள்ளி குதித்துக் கொண்டு வெளியேறினார். அவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.