ஆடுகளம் தன்மையில் காம்பீர் தலையிடக்கூடாது- கவாஸ்கர் எச்சரிக்கை
- ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடுவது நல்லது.
- பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலையிடக்கூடாது.
கொல்கத்தா, நவ.18-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடி யாமல் 93 ரன்னில் சுருண்டு படு தோல்வி அடைந்தது.இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந் தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
தொடக்க நாளில் இருந்தே கொல்கத்தா ஆடு களம் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந் தது. இது மாதிரியான பிட்சை அமைக்குமாறு ஆடு கள பராமரிப்பாளரிடம் பயிற்சியாளர் காம்பீர் கேட் டுள்ளார். இதனால் தான் இந்திய அணி 4 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங் கியது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்க ளாலும் இந்த ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆட முடிய வில்லை. இதனால் காம்பீர் கடும் விமர்சனத்தை சந்தித் துள்ளார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர்கள் புஜாரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடுகளம் தொடர்பாக காம்பீரை சாடி இருந்தனர்.
இந்த நிலையில் முன் னாள் கேப்டனும், டெலிவி சன் வர்ணனையாளருமான கவாஸ்கரும் இது தொடர் பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆடுகளத் தின் தன்மை தொடர்பாக தலையிடக்கூடாது என்று அவர் காம்பீரை அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
ஆடுகள பராமரிப்பாள ரை நீங்கள் (காம்பீர்) தனி யாக விட்டு விட வேண்டும். பிட்ச் நிலைமைகளை உத்தர விட முயற்சிக்கக் கூடாது. அது சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடு வது நல்லது. ஏனென்றால் அவர் மற்றவர்களை விட தனது வேலையை பற்றி நன்கு அறிவார்.
பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலை யிடக்கூடாது. இதனால் ஏற் படும் விளைவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.