கிரிக்கெட் (Cricket)

பழனியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் சாமி தரிசனம்

Published On 2025-10-05 15:40 IST   |   Update On 2025-10-05 15:46:00 IST
  • கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
  • காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளனர்.

பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.

அதன்படி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் தனது குடும்பத்தினருடன் இன்று காலை பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் இன்று காலை நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவரை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளனர்.

அதற்காக வந்த அவர் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News