கிரிக்கெட் (Cricket)

துலீப் டிராபி 2025: இஷான் கிஷன் விலகல்- கேப்டனாக களமிறங்கும் அபிமன்யு ஈஸ்வரன்

Published On 2025-08-18 14:40 IST   |   Update On 2025-08-18 14:40:00 IST
  • இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
  • இஷான் கிஷன் விலகிய நிலையில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் (காலிறுதி) போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், துலீப் டிராபி தொடரில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு ஆஷிர்வாட் ஸ்வைன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News