கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் கோப்பை: ஹைபிரிட் மாடலுக்கு நிபந்தனை விதித்த பாகிஸ்தான்?

Published On 2024-12-01 13:52 IST   |   Update On 2024-12-01 13:52:00 IST
  • சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் விளையாடுகின்றன.
  • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

எட்டு அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டியின் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஒட்டி இந்திய அணி இந்த முறையும் அந்நாட்டுக்கு சென்று விளையாட மறுத்து விட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அட்டவணையை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இதற்கு சில நிபந்தனைகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தோல்வியுற்றால் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த வேண்டும்.

வருங்காலங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா செல்லாது என்றும் தங்களுக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும். மேலும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் நிபந்தனைகள் வைக்கப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News